சீரற்ற காலநிலை 30 பில்லியன் நஷ்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 8 லட்சத்து 63 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மழை வௌ்ளத்தால் 30 பில்லியன் வரையில் பெறுமதியான சொத்துக்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இதேவேளை சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டமே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 127,882 குடும்பங்களைச் சேர்ந்த 482, 323 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்களுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 146 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சிங்களவரே இலங்கையின் தேசிய இனம்


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாச்சியமளிதுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகர் உதய கம்மன்பில நேற்றைய ஆணைக்குழுவின் அமர்வின்போது தெரிவித்த கருத்துகளில் முக்கியமான விடையங்களை மட்டும் இங்கு தருகின்றோம் இலங்கையை பொறுத்தவரை சிங்கள மக்கள் மட்டுமே ஒரு இனமாக கருத முடியும் அந்த வகையிலேயே எமது வரலாறு கலாசாரம் அமைந்துள்ளது.

 இந்தியாவின் தமிழகத்தில் உள்ள தமிழ் மக்கள் அங்கு அவர்கள் தம்மை ஒரு தேசிய இனமாக பார்க்கலாம் அதாவது தாய் மக்களின் நாடு தாய்லாந்து போன்று ஜப்பானியர்களின் நாடு ஜப்பான் இலங்கையின் தேசிய இனமாக சிங்கள மக்களை மட்டுமே பார்கலாம் அவர்கள் சுயாட்சியையே சுய நிர்ணய உரிமைகளையோ கோரமுடியாது சிறு மக்கள் பிரிவினருக்கு உள்ள உரிமையையே அனுபவிக்கமுடியும் எஎன்று தெரிவித்துள்ளார் 

மேலும் அவர் சாச்சியமளிக்கையில் தற்போது மக்களுக்கு ஒரு விடையத்தை கூறவேண்டும் அதாவது புலிகளை தோற்கடித்த வெற்றிக்களிப்பில் தொடர்ந்து இருக்கவேண்டாம் அதற்கடுத்த பிரிவினைவாத சவாலை எதிர்கொள்ள முன்வாருங்கள் நவீன முறையில் எதிர்காலத்தில் பிரிவினை வாதம் உருவாகலாம் புலிகளின் வால் மட்டுமே இலங்கையிளிருந்தது. அதனை வெட்டியுள்ள நாங்கள் புலிகள் தோற்கடிக்கப் பட்டுள்ளதாக கூறுகின்றோம்.

 இற்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருக்கவில்லை 86 நாடுகளில் யூதர்கள் பரந்து காணப்பட்டனர் இவர்கள் ஒரு கட்டத்தில் 86 நாடுகளிலும் இருந்த யூதர்கள் ஒன்று கூடி இயக்கம் ஒன்றை ஆரம்பித்து பலஸ்தீனுகுள் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கினர் …. நாங்கள் பௌத்தர்கள் தர்க்கவியல் ரீதியில் நிரூபிக்கபடும் விடையங்களை ஏற்றுகொள்வோம் தமிழ் ஈழம் சரியான கோரிக்கை என நிரூபித்தால் அதற்காக முன்நிற்க தயார் என்று நாங்கள் கூறிவந்தோம் ஆனால் யாரும் அதனை நிரூபிக்க முன்வரவில்லை . மாறாக அச்சுறுத்தல் மட்டுமே இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

விளக்கமறியலில் உள்ளவர்களுக்கு விடுதலை


பல மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை பெறக்கூடிய வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தீங்கு விளைவிக்கும் ஆயுதங்கள் திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 மேலும் அவர் உரையாற்றுகையில், 

தீங்கு விளைவிக்கும் ஆயுதங்கள் திருத்தச் சட்டத்தின் கீழ் குற்றஞ் சுமத்தப்பட்டவர்கள் மாகாண ரீதியிலான மேல் நீதிமன்றங்களில் பிணை கோரக்கூடிய வகையில் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன

மலேசியாவுக்கு அச்சுறுத்தல்


சர்வதேச மற்றும் தேசிய பொலிஸாரின் உதவிகளைப் பெற்று இவ்வாறான நபர்கள் குறித்த தகவல்களை திரட்டிவருவதாக அவர் கூறியுள்ளார். 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், முஸ்லிம் ஆயுதக் குழுக்கள், சீக் ஆயுதக்குழு என்பன தமது இயங்கங்களுக்குப் பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துக் கொள்ள முயற்சித்து வருவதாக மலேசிய உள்விவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை கடந்த வருடத்தில் மாத்திரம் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 12ற்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More