45 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தை ஜனாஸாவாக மீட்பு


கிண்ணியா காக்காமுனைப் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்ட நபர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காக்காமுனைப் பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய உவைஸ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது வீட்டிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் வசித்த பகுதிகள் எரியூட்டப்பட்டன (படங்கள் இணைப்பு)

கிழக்கு மாகாணத்தில் யுத்த வெற்றிக்குப் பின்னர் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்ட ஏறாவூர் தாமரைக்கேணி அல். அக்சா கிராமத்தில் நேற்றிரவு 9:00 மணியளவில் மூன்று குடிசைகள் எரியூட்டப்பட்டுள்ளன.
 
85 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டு வசித்து வரும் இக்கிராமத்தில் குடிசைகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளமை மூன்றாவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
 
குறித்த இடத்துக்கு விஜயம் செய்த ஏறாவூர் வர்த்தக சங்கத் தலைவரும் நகர சபை உறுப்பினருமான எம்.எல்.றவுபாசம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்ததோடு மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார். இதுவரையில் கிடைத்த தகவல்களின்படி குறித்த இடத்துக்கு எந்த பாதுகாப்பு அதிகாரிகளும் வருகை தரவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
 


 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More