கிழக்கு மாகாணத்தில் யுத்த வெற்றிக்குப் பின்னர் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்ட ஏறாவூர் தாமரைக்கேணி அல். அக்சா கிராமத்தில் நேற்றிரவு 9:00 மணியளவில் மூன்று குடிசைகள் எரியூட்டப்பட்டுள்ளன.
85 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டு வசித்து வரும் இக்கிராமத்தில் குடிசைகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளமை மூன்றாவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த இடத்துக்கு விஜயம் செய்த ஏறாவூர் வர்த்தக சங்கத் தலைவரும் நகர சபை உறுப்பினருமான எம்.எல்.றவுபாசம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்ததோடு மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார். இதுவரையில் கிடைத்த தகவல்களின்படி குறித்த இடத்துக்கு எந்த பாதுகாப்பு அதிகாரிகளும் வருகை தரவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.