சீரற்ற காலநிலை 30 பில்லியன் நஷ்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 8 லட்சத்து 63 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மழை வௌ்ளத்தால் 30 பில்லியன் வரையில் பெறுமதியான சொத்துக்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இதேவேளை சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டமே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 127,882 குடும்பங்களைச் சேர்ந்த 482, 323 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்களுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 146 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More