சிங்களவரே இலங்கையின் தேசிய இனம்


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாச்சியமளிதுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகர் உதய கம்மன்பில நேற்றைய ஆணைக்குழுவின் அமர்வின்போது தெரிவித்த கருத்துகளில் முக்கியமான விடையங்களை மட்டும் இங்கு தருகின்றோம் இலங்கையை பொறுத்தவரை சிங்கள மக்கள் மட்டுமே ஒரு இனமாக கருத முடியும் அந்த வகையிலேயே எமது வரலாறு கலாசாரம் அமைந்துள்ளது.

 இந்தியாவின் தமிழகத்தில் உள்ள தமிழ் மக்கள் அங்கு அவர்கள் தம்மை ஒரு தேசிய இனமாக பார்க்கலாம் அதாவது தாய் மக்களின் நாடு தாய்லாந்து போன்று ஜப்பானியர்களின் நாடு ஜப்பான் இலங்கையின் தேசிய இனமாக சிங்கள மக்களை மட்டுமே பார்கலாம் அவர்கள் சுயாட்சியையே சுய நிர்ணய உரிமைகளையோ கோரமுடியாது சிறு மக்கள் பிரிவினருக்கு உள்ள உரிமையையே அனுபவிக்கமுடியும் எஎன்று தெரிவித்துள்ளார் 

மேலும் அவர் சாச்சியமளிக்கையில் தற்போது மக்களுக்கு ஒரு விடையத்தை கூறவேண்டும் அதாவது புலிகளை தோற்கடித்த வெற்றிக்களிப்பில் தொடர்ந்து இருக்கவேண்டாம் அதற்கடுத்த பிரிவினைவாத சவாலை எதிர்கொள்ள முன்வாருங்கள் நவீன முறையில் எதிர்காலத்தில் பிரிவினை வாதம் உருவாகலாம் புலிகளின் வால் மட்டுமே இலங்கையிளிருந்தது. அதனை வெட்டியுள்ள நாங்கள் புலிகள் தோற்கடிக்கப் பட்டுள்ளதாக கூறுகின்றோம்.

 இற்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருக்கவில்லை 86 நாடுகளில் யூதர்கள் பரந்து காணப்பட்டனர் இவர்கள் ஒரு கட்டத்தில் 86 நாடுகளிலும் இருந்த யூதர்கள் ஒன்று கூடி இயக்கம் ஒன்றை ஆரம்பித்து பலஸ்தீனுகுள் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கினர் …. நாங்கள் பௌத்தர்கள் தர்க்கவியல் ரீதியில் நிரூபிக்கபடும் விடையங்களை ஏற்றுகொள்வோம் தமிழ் ஈழம் சரியான கோரிக்கை என நிரூபித்தால் அதற்காக முன்நிற்க தயார் என்று நாங்கள் கூறிவந்தோம் ஆனால் யாரும் அதனை நிரூபிக்க முன்வரவில்லை . மாறாக அச்சுறுத்தல் மட்டுமே இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More